×

காரைக்குடி சூடாமணிபுரத்தில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: பகுதிகள் அளவீடு

காரைக்குடி, டிச. 9: காரைக்குடி அருகே இலுப்பைக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை சூடாமணி வீடு கட்டும் கூட்டுறவு சங்கம் சார்பில் வாங்கப்பட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாங்கப்பட்ட இடம் போக மீதம் உள்ள பல ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அளக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருந்தது.

இதன்படி நேற்று நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிகுமார், ஆய்வாளர் பிச்சுமணி, கொப்புடையநாயகி அம்மன் கோயில் செயல் அலுவலர் மகேந்திர பூபதி, வட்டாட்சியர் (கோயில்கள்), சர்வேயர், இலுப்பைக்கு சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் தக்கார், கொப்புடையநாயகி அம்மன், முத்துமாரியம்மன் கோவில் பணியாளர்கள் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டாக அளக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

பின்னர் அதிகாரிகள் கூறுகையில், ‘வீட்டு மனைக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் போக மீதம் உள்ள இடங்கள் எவ்வளவு, என்ன மாதிரியான பயன்பாட்டில் உள்ளது, வீட்டு மனை இடங்கள், வணிக பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், இன்ஸ்டியலுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்கள், காலியிடங்கள் என்ன நிலையில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான இடம் என்ன நிலையில் உள்ளது உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் குறித்து அளந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கையாக வழங்க உள்ளோம்’ என்றனர்.

The post காரைக்குடி சூடாமணிபுரத்தில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: பகுதிகள் அளவீடு appeared first on Dinakaran.

Tags : Karaikudi Soodamanipuram ,Karaikudi ,Sudamani ,Illuphaikudi Swayamprakasa Ishwarar Temple ,Karaikudi Sudamanipuram ,Dinakaran ,
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...